search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபரிடம் மோசடி"

    • உதயகுமார் தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்
    • இதனை உண்மை என நம்பிய சதீஷ் ஆன்லைன் முறை யில் இந்த நபர் கொடுத்த வங்கி கணக் கில் பணம் அனுப்பினார்.

    கோவை:

    கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 60). தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் உணவு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ஒருவர் ஆன்லைன் தகவல் அடிப்படையில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அந்த நபர் கொப்பரை தேங்காய் வேண்டும் என ஆர்டர் கொடுத்து 2 டன் எடையிலான ரூ. 2.42 லட்சம் மதிப்பிலான கொப்பரை வாங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து உதயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (63). குளியலறை பிட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பாரத் பெட ்ரோலியம் நிறுவனத்தில் பாத் ரூம் பிட்டிங் செய்து தரவ ேண்டும்.

    இதற்கு நீங்கள் ரூ. 2.46 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும். வேலை முடிந்த பின்னர் பில் மற்றும் டெ பாசிட் தொகை வழங்கப்படும் என பேசி னார். இதனை உண்மை என நம்பிய சதீஷ் ஆன்லைன் முறை யில் இந்த நபர் கொடுத்த வங்கி கணக் கில் பணம் அனுப்பினார். ஆனால் பணத்தைப் பெற்ற அந்த நபர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. ஏமாற் றப்பட் டதை அறிந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய் யப்பட்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.

    ×